"ஆணாய் பிறந்தாலே
ஆளப்பிறந்தவன்" என
ஆளப்பிறந்தவன்" என
ஆசை ஆசையாய்
நெஞ்சோடு சேர்த்து
நெஞ்சம் மகிழ்ந்தவளே..! - நீ
நெஞ்சோடு சேர்த்து
நெஞ்சம் மகிழ்ந்தவளே..! - நீ
நினைவிழக்கும் தருணத்தில்,
நினைவிருந்தும் வரவில்லை உன் மகன் !
"சாண் பிள்ளையானாலும்
ஆண் பிள்ளை"யென்று
சாதம் ஊட்டும் போதும்
சாதனை படைக்கும்போதும்
இறுமாப்பாய் கூறியவளே - உன்
இறுதிச் சடங்குக்கு
இதுவரைக்கும் வரவில்லை !
"கடைசி வரை
சோறு போடுபவன் அவனல்லவா"
"சாண் பிள்ளையானாலும்
ஆண் பிள்ளை"யென்று
சாதம் ஊட்டும் போதும்
சாதனை படைக்கும்போதும்
இறுமாப்பாய் கூறியவளே - உன்
இறுதிச் சடங்குக்கு
இதுவரைக்கும் வரவில்லை !
"கடைசி வரை
சோறு போடுபவன் அவனல்லவா"
என கண்ணாய் வளர்த்த உனக்கு
கடைசிநேர வாய்க்கரிசி போட
காத்திருந்தும் வரவில்லை !
வேலை கிடைக்க வேண்டி
விரதம் இருந்து
விளக்கேற்றி
வீதி வழி வந்தவளை
வீதியில் எடுத்துச்செல்ல
விரைந்து வர மனமில்லை !
தொண்டைக்குழிக்குள்
தொடாத வானமாய் அங்கே அவன்....!
உன் உடலதனை
உண்மையாகத் தாங்கிய பூமியாய்
இங்கே இவள்.
கடைசிநேர வாய்க்கரிசி போட
காத்திருந்தும் வரவில்லை !
வேலை கிடைக்க வேண்டி
விரதம் இருந்து
விளக்கேற்றி
வீதி வழி வந்தவளை
வீதியில் எடுத்துச்செல்ல
விரைந்து வர மனமில்லை !
தொண்டைக்குழிக்குள்
தொடாத வானமாய் அங்கே அவன்....!
உன் உடலதனை
உண்மையாகத் தாங்கிய பூமியாய்
இங்கே இவள்.
(நன்றி அவள்)
