உன் பெயரிலையே அதிஷ்டத்தை
கொண்டவளே...!
உன் மெளனச் சிரிப்பினிலும்
அகன்ற விழிப்பார்வையிலும்
நான் சிக்கித் தவிக்கிறேன்...!
இப்பொழுதெல்லாம்
உன்னைவிட கனவுகளைத் தான்
அதிகம் நேசிக்கின்றேன்..!
அதில் மட்டும் தானே என்னோடு
நீ பேசிக்கொள்கிறாய்.....!
முதன்முறை நினைத்தேன்
உயிர் வரை இனித்தாய்..!
மறுமுறை நினைத்தேன்
இதயத்தில் வலித்தாய்..!
என்னைவிட நல்லதோர்
வாழ்க்கை துணை கிடைத்தால்
என்னை நீ மறப்பாய்..!
இல்லையேல் நிச்சயம்
என்னை நீ நினைப்பாய்..!



No comments:
Post a Comment